காலையில் ஹிந்து பார்த்தால் ஒரு முக்கியமான பதிவு:
http://www.hindu.com/2004/05/26/stories/2004052602871200.htm
0. இந்தக் கண்டுபிடிப்பில் கணிக்கப் பட்ட காலம் சரியானதாக இருந்தால் இது ஒரு மகத்தான கண்டுபிடிப்பு. தமிழ் சரித்திரம் இனி வேறு வகையில் மாற்றி எழுதப்படும்.
1. இரண்டாயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன் தமிழ் எழுத்து (குடிவாழ் எச்சங்களுடன்) எனில், பலப் பல விஷயங்கள் மறு ஆய்வு செய்யப் படும்.
2. வையாபுரிப் பிள்ளை போன்றவர்களால் கி.பி. 300 என வகுக்கப்பட்ட சங்ககாலம் மிக எளிதாக கி.மு வுக்குப் போய்விடும்
3. சங்க காலப் பாடல்களின் எளிமை, ஒரு முதிர்வடைந்த மொழிக்குழுவின் வெளிப்பாடு என்ற கருத்தோடு சரியாக ஒத்திசையும்.
4. சங்கப் பாடல்களில் விரியும் வாழ்க்கைமுறையில் தென்படும் செரிந்த விடயங்கள் வெறும் கவிஞர் புனை கூற்றாகாமல் அவற்றின் மொழிஎளிமை, பொருள் பயன்பாட்டு இயல்பு இவற்றுடன் ஒத்திசையும் ஆவணமாக ஏற்கும் நிலையும் ஆகலாம்.
5. கேரளத்திலும், தமிழக கடற்கரையிலும் நடக்கும் கடல்தொன்மவியல் அகழ் முயற்சிகள் துரிதமாக்கப் பட்டால் வணிகச் சரிதமும் மாற்றி பொருள் கூறப்பட சாத்தியம் உள்ளது.
6. தமிழகத்தின் சங்ககாலத்து, அதன் முந்தைய சமயம் பற்றிய கோட்பாடுகள் நிச்சயம் மறுஆய்வுக்குள்ளாகும்.
7. தென்னாசிய மொழி வரலாறு மாறும் காலம் துவங்கிவிட்டதுபோல் தெரிகிறது.
அன்புடன்
அருள்
2 comments:
அருள்: இதுபற்றிய என்னுடைய பதிவு:
http://thoughtsintamil.blogspot.com/2004/05/blog-post_108555714274864557.htம்ல்
எப்போதுமே எப்படி வரலாறு துணைக்கண்டத்தின் வடக்கில் இருந்து தொடங்குகிறது என்று ரொம்ப நாளாகவே சந்தேகம்!
Post a Comment