எல்லைகள் அமைத்து விட்டு
எண்திசையும் குறிவரைந்து
உள்ளே வந்தமர்ந்தேன்
ஊர்ந்து நுழைந்தவர்கள்
உடைத்துப் பாய்ந்தவர்கள்
கள்ளச் சாவியிட்டு
கதவு பெயர்த்தடைந்தவர்கள்
எல்லோரும் புலம் நிறைய
அய்யோ அய்யய்யோவென
அசைந்திடியும் மணல் நகரம்
கரைந்தழிந்த எரிமடல்கள்
தாவிச் சிறகடித்து
தணல் பெய்து உயிர்பொசுக்கி
ஓடிப் பறந்த என்
செல்லக்கிளி வகைகள்
முகம் மட்டும் காட்டி
முறுவலித்த மூடியெல்லாம்
டப்டப் பென வெடிக்க
எல்லோரும் சேர்ந்திசைக்கும்
எதிர்மடக்குக் களிப்பாடல்
ஆஹா என்சொல்வேன்
ஆண்டவனே படைத்துப் போந்த
அண்டம் இதுவன்றோ
இதற்கும் இணை உண்டோ
No comments:
Post a Comment