இந்தவருட புத்தகக் கண்காட்சியில் நல்ல புத்தகங்கள் பல வாங்க முடிந்தது. படைப்பிலக்கியம் அல்லாதவைதான் நிறைய.
வாங்கியதில் முக்கியமானவை:
1. அறிவியல் தமிழறிஞர் பெ. நா. அப்புசுவாமி
(தமிழில் அறிவியலைப் பற்றி பொதுமக்களுக்கு எழுதியவர்களுள் முக்கியமானவரான அப்புசுவாமி பற்றிய 16 கட்டுரைகள்),
பதிப்பாசிரியர்: கிருட்டினமூர்த்தி, வளர்மதி, தசரதன்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003.
2. பிரமாண்டமும் ஒச்சமும்
(சி.சு செல்லப்பாவின் படைப்புகள் பற்றி 8 கட்டுரைகள்),
தொகுப்பு: பெருமாள் முருகன்,
காலச்சுவடு வெளியீடு, 2004.
3. தொல்லியல் நோக்கில் சங்க காலம், கா.ராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
4. சிரவையாதீனப் பதிப்புகள், (கோவையருகிலுள்ள கொளமார மடத்தின் பதிப்புகளைப்பற்றியது ), ப.வெ. நாகராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
5. பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும், இராசு. பவுன்துரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
6. போகர் நிகண்டு, தாமரை நூலகம், 1998.
7. காகபுசுண்டர் பெருங்காவியம் 1000, தாமரை நூலகம், 1999.
8. இயல்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள், இராம. சுந்தரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1997.
9. கண்டதைச் சொல்லுகிறேன், ஞானி, விழிகள், 2004
10. இரவுக்கு முன்பு வருவது மாலை, ஆதவன், கிழக்கு பதிப்பகம், 2004
11. அரசூர் வம்சம், இரா.முருகன், கிழக்கு பதிப்பகம், 2004.
12. தமிழகத்தில் ஆசீவகர்கள், ரா. விஜயலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1998.
இன்னும் சில தத்துவயியல் பற்றிய ஆங்கில புத்தகங்கள் வாங்கினேன்.
இதற்குமேல் வீட்டில் வெளியே விரட்டிவிடுவார்கள் என்பதால் நிறுத்திக்கொண்டேன். பையன் அப்பா அடுத்தது என் சுற்று என்று கிளம்பியிருக்கிறான். பார்போம். காட்சியில் அகப்பட்ட சிலருடைய படங்கள். நீங்களே அடையாளம் கண்டுபிடிக்க.



