படைத்தல் என்பது எழுத்தின் மூலம் சாத்தியப்படும்போது, எழுத்து என்பது மொழியின்றி இருப்பதில்லை என்பதையும் நாம் அறியலாம். மொழி-சொற்கள்-எழுத்து என்று இவை ஒரு சிக்கலான வலைப்பின்னலாக உருக்கொண்டு நம் உயிரின் இருப்பைத் தக்க வைக்கின்றன. இப்பின்னலின் மூலம் கண்டு தெளிவதே அநுபூதி நிலை எனும் அர்த்தமற்ற பெருவெளி உணர்வதாகும். மொழியின், எழுத்தின், சொற்களின் வலிமை உணர்ந்தவர் இதனை அறிவார்கள். முன்பே சொன்னதுபோல் உயிருக்கு நிகர் இவை. அதை வாங்கவும் கூடும் என்றும் உணரவேண்டும். இந்த நூற்றாண்டின் முதல் ஐந்து தமிழ் நாவல்களை பட்டியலிட்டால் அவற்றில் ஒன்றுகூட கவிதையாக இருக்காது என்பதிலிருந்த்து கவிதைக்கும் உரைநடைக்கும் இருக்கும் தூரத்தை வரும் காலத்திலும் கடப்பது என்பது சாத்தியமில்லை என்றே கருதலாம்.
( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )
2 comments:
பகிர்ந்தமைக்கு நன்றி!
சொற்களில் எண்களும் சேர்த்தியா? உங்கள் தலைப்புகளைப்போல....;-)
Post a Comment