
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.?
இதேபோல் சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையிலான இணக்கமும் பிளவும் என்பதை எப்படி அணுகுவது?
---------------------------
ஒரு நாத்திகக் கவிதை
---------------------------
இரவெல்லாம் எலிமுகரும்
தெருப் பரப்பில்
பொறுக்கிய் இக்கணிதம்
கனல் சிவந்து
வெளிகடக்கப்
பாயும் இவ்வோடத்தின்
கலன் திருப்ப
உயிர் உறைக்க
உணவு வெதுக்கவென
அலையும் மின்துகளை
ஏவிச் சிரிக்கிறது
.....***
...***
மனம் பெற்றால் போதுமென
திரியும் கோள்குழுக்கள்
மதி அற்றால் கூடுமென
பதறும் உயிர்த் திரள்கள்
அழல் சுற்றி கணம் வற்றி
அதிர்வடங்கும் அப்போழ்தில்
எதுகற்று எம் இமைமூட
குன்றுறையும் வேலனே
குமார குருபரனே.
----------------------
No comments:
Post a Comment